மக்கள் தொகை கணக்கெடுப்பும், ஊடுருவியர்களால் ஏற்படும் ஆபத்தும்

மத்திய அரசு நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியை தொடங்கியுள்ளது. மேற்குவங்கம், பிஹார் போன்ற மாநிலங்களில், பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் சட்டவிரோதமாக ஊடுருவியுள்ளார்கள். ஊடுருவியவர்களும் மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களின் தரவுகளை பதிவு செய்தால் ஏற்படும் ஆபத்தை உணர்ந்து, அதனை தடுப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு உயர்மட்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது என தெரிவித்தார்.
1947-ல் நாடு பிளவுபடுவதற்கு என்ன காரணம் கூறப்பட்டதோ, அதே காரணங்கள் மீண்டும் எழுந்துள்ளன. இதன்காரணமாக மீண்டும் ஒரு பிரிவினையை தூண்டக் கூடிய சக்திகள் உருவாகியுள்ளன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
50 சதவீதத்திற்கு அதிகமான முஸ்லிம்களை கொண்ட மாவட்டம் 1951-ல் வெறும் 8 மட்டுமே. மேற்படி 8 மாவட்டமும், காஷ்மீர் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது. 2011-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது மேற்குவங்கம், பிஹார், அஸ்ஸாம், உத்தரப்பிரதேசம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் 36 மாவட்டங்களில் இதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளன.
ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு பின்னர் தரவுகளை ஆராய்ந்து பார்த்தால், சிறுபான்மையினரின் மக்கள்தொகை அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டி, மாநில அரசாங்கங்கள் வெவ்வேறு தரவுகளை வழங்கியுள்ளன.
தற்போது பல பிராந்தியங்கள், நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர். ஹிந்துக்கள் ஒன்று தப்பி ஓடியுள்ளனர் அல்லது வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மதம் மாற்றப்பட்டுள்ளனர், அல்லது கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த ஊடுருவல் எல்லைப் பகுதிகளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படவில்லை, மாறாக பாரதம் முழுவதும் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கும் பரவியதால், அப்பகுதியின் மக்கள்தொகை அமைப்பே மாற்றியுள்ளது. 1997-ல், உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா, பாரதத்தில் 1 கோடி பங்களாதேஷியர்கள் வசிப்பதாகக் கூறினார்; 2004ல், காங்கிரஸ் ஆட்சியின் போது, அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெயஸ்வால், பாரதத்தில் 1.2 கோடி பங்களாதேஷியர்கள் வசிப்பதாக கூறினார்; 2016ல், பிரதமர் மோடி அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜூ பாரதத்தில் 2 கோடி பங்களாதேஷியர்கள் வசிப்பதாக கூறினார்.
சட்டவிரோதமாக குடியேறுபவர்கள் மக்கள்தொகை கணக்கெடுப்பில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சேர்க்கப்படும் போது, தேசிய மற்றும் மாநில மக்கள்தொகை புள்ளி விவரங்களில் பெரும் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இது குறிப்பிட்ட மாவட்டங்கள் அல்லது மாநிலங்களின் இயல்பான வளர்ச்சி விகிதத்தை மாற்றியமைக்கிறது. மக்கள்தொகை தரவுகளின் அடிப்படையில்தான் அரசு திட்டங்கள், மானியங்கள், உணவு விநியோகம் மற்றும் இடஒதுக்கீடுகள் வழங்கப்படுகின்றன.
சட்டவிரோதமாக ஊடுருவியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், அந்தந்த பகுதிகளில் உள்ள உண்மையான குடிமக்களுக்கு செல்ல வேண்டிய வளங்கள் மற்றும் சேவைகள் குறைவடைகின்றன. இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 