மகேஷ் பொய்யாமொழியின் கரிசனம்

முஸ்லிம்கள் ஏற்பாடு செய்து இருந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எப்படிப்பட்ட கருத்துக்கள் எல்லாம் ஒன்றியத்தை ஆண்டு கொண்டுள்ள கட்சியை சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர். நபிகள் பற்றி இனி யாராவது வாய் திறந்தால் இந்த கூட்டம் மட்டுமில்லை ஒட்டு மொத்த இந்தியாவே உங்களுக்கு எதிராக ஒன்றுகூடும். இன்றைக்கு, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த நாங்கள் மட்டுமல்ல திராவிட இயக்கம் மட்டுமல்ல மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி என நாங்கள் அனைவரும் சேர்ந்து உங்களுக்கு எச்சரிக்கை மணி அடிக்கும் கூட்டமாக இதை நாங்கள் பார்க்கிறோம்’ என பேசினார். இதே தி.மு.கவினர்தான் தமிழகத்தில் ஹிந்து கடவுள்களை அவமதிப்பதை தொடர்ந்து ஆதரித்து வருகின்றனர். குறிப்பாக, திராவிடர் கழகத்தினர் கருப்பர் கூட்டம், யூ 2 புரூட்டஸ் மைனர் விஜய் போன்றவர்களை ஆதரித்து ஊக்குவிக்கின்றனர். மைனர் விஜய் மீது புகார் அளிக்கப்பட்டும் இதுவரை அவரை கைது செய்யவில்லை என்பதே தி.மு.கவின் ஹிந்துவிரோத மனப்பான்மையை தெளிவாக விளக்குகிறது. தி.மு.க மட்டுமல்லாது, தி.க, கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் என மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியினர் எல்லாமே ஹிந்துக்களையும் ஹிந்து தெய்வங்களையும் குறிவைத்தே அரசியல் செய்து வருகின்றனர். பல ஹிந்து கோயில்களை சட்டத்தை காரணம் காட்டி இடித்துள்ள தி.மு.க தலைமையிலான அரசு, அதே சட்டத்தை காரணம் காட்டி தமிழகத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள பல்லாயிரம் சர்ச் மற்றும் மசூதிகளில் ஒன்றைகூட இதுவரை அகற்றவில்லை என்பதை மக்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.