நூதன சுவரொட்டி பிரச்சாரம்

கர்நாடக மாநில ஹிந்துக் கடைக்காரர்கள் , நமதுநாட்டில் ஹிந்துக்களுக்கு எதிராக அதிகரித்து வரும் மதசகிப்பின்மைக்கு எதிராகவும் சமீபத்தில் ராஜஸ்தானில் ஹிந்து தையல்காரரின் உயிரைக் கொன்ற முஸ்லிம் பயங்கரவாதிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் விதத்திலும் ஒரு நூதன சுவரொட்டி பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளனர். கடைக்காரர்களின் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தபுகைப்படங்களில் கடைக்காரர்கள், “நான் ஒரு ஹிந்து, என் உயிரைப் பறிக்காதே”, “நாங்கள் உண்மையைப் பேச மாட்டோம், என் குடும்பம் என்னைச் சார்ந்திருக்கிறது”, “நான் உண்மையைப் பேசமாட்டேன்” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி நிற்கின்றனர்.