பறிபோன பைரவர் சிலை; தொடரும் களவு முற்றுபுள்ளி வைக்குமா அரசு?

வேலூர் திருமலைசேரியில் உள்ள சோமநாதர் கோவிலில் பைரவர் சிலை காணவில்லை இன்று டில்லிபாபு என்பவர் புகார் தெரிவித்தார். அந்த வழக்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைத்தது காவல் துறை.

தற்போது அந்த சிலை சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்து அங்கு சென்று பார்த்தனர். ஆனால் அந்த சிலை அங்கு இல்லை.

பைல் படம்

அந்த சிலை அங்கு இருந்து களவாட போக வாய்ப்பு இல்லை, அது அங்கு இருப்பவர்கள் ஒத்துழைப்போடு வெளிய போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் பொதுவாக எங்கிருந்தாவது சிலைகள் கண்டு எடுக்கபட்டாளும் சரி, காவல் துறை மீட்ட சிலைகளும் அருங்காட்சியகத்தில் தான் வைக்கப்படும். அந்த சிலைகள் பாதுகாப்பற்ற முறையில் வெயிலிலும், மழையிளிலும் கேட்பாரற்று உள்ளது.