பயங்கர தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவல்

பயங்கரவாதிகள் குறித்த எச்சரிக்கையை தொடர்ந்து கோவையில் இரண்டாவது நாளாக போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாடு முழுவதும் செப்.,2ல் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருப்பதையொட்டி கோவையில் லக்ஷர் இ தொய்பா அமைப்பு தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது. ஆறு பயங்கரவாதிகள் நகருக்குள் ஊடுருவி உள்ளதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. இதனையடுத்து கோவை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், 2வது நாளாக கோவையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களான வழிபாட்டுதலங்கள், ரயில், பேருந்து நிலையங்கள், வணிகவளாகங்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.