அவதூறு வழக்கில் ராகுலுக்கு சம்மன்

பிரதமர் மோடியை அவதூறு செய்வதாகக் கருதிக்கொண்டு மோடி என்ற சமூகப்பெயர் கொண்ட ஒரு இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ஒட்டுமொத்தமாக இழிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதுகுறித்து அந்த சமூகத்தினர் தொடர்ந்த வழக்கில், குஜராத் நீதிமன்றம் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதன் எதிரொலியாக, மக்களவை செயலகம் அவரது எம்.பி. பதவியை அதிரடியாக பறித்தது. அரசு பங்களாவை காலி செய்ய கூறி நோட்டீசும் அனுப்பப்பட்டது. இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக பீகார் பா.ஜ.க.வின் சுஷில் குமார் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு பாட்னா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு வரும் ஏப்ரல் 12ம் தேதி ஆஜராகும்படி ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது.