ஸ்வயம்சேவகர் கொலைவழக்கில் கைது

கேரள மாநிலம் பாலக்காட்டில் ஆர்.எஸ்.எஸ் ஸ்வயம்சேவகர் ஸ்ரீனிவாசன் கொலை வழக்கில் அந்த கொலையில் தொடர்புடைய கேரள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி காவலரான ஜிஷாத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் உதவியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு நவம்பர் 15ம் தேதி கிணச்சேரி மாவட்டத்தில் கொல்லப்பட்ட மற்றொரு ஆர்.எஸ்.எஸ் பிரமுகரான எஸ் சஞ்சித் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா உறுப்பினர்களுடனும் இவர் தொடர்பில் இருந்துள்ளார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.  இந்த வழக்கு தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்ட 22வது நபர் ஜிஷாத். இந்த வழக்கில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம் என பாலக்காடு மாவட்ட காவல்துறைத் தலைவர் ஆர் விஸ்வநாத் கூறியுள்ளார்.