விஜயபாரதம் சந்தா சேகரிப்பு

விஜயபாரதம் சந்தா சேகரிப்பு கூட்டம் வேலூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், விஜயபாரதம் வார இதழ் ஆசிரியர் பெ. வெள்ளைத்துரை, வேலூர் விபாக் பிரச்சாரக் கணேசன், ஆர்.எஸ்.எஸ் வடதமிழக சேவா பிரமுக் சீனிவாசன், மாவட்டத் தலைவர் ஜெகதீசன், மாவட்ட செயலாளர் நித்யானந்தன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 40க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இதில் கருத்துக்களை பறிமாறினர். இந்த நிகழ்வில், வேலூர் மாவட்டத்தில் இருந்து ஆயிரம் சந்தாக்கள் திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது.