இந்து முன்னணியினர் மீது வி.சி.க தாக்குதல்

அரியலூர் மாவட்டத்தில் இந்து முன்னணி துணைத் தலைவராக இருப்பவர் ரமேஷ். இவர் அப்பகுதியில் கிறிஸ்தவ மத மாற்றத்தை எதிர்த்து கேள்வி கேட்டுள்ளார். இதனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் ரமேஷை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஜெயங்கொண்டத்தில் இந்து முன்னணி கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் தாக்கியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர்.