பழனியில் மீண்டும் வேல்

பழனியில், பஸ் நிலையம் அருகே குளத்துரோடு ரவுண்டானாவில் கிரானைட்டால் செய்யப்பட்ட வேல் சிலை இருதினங்களுக்கு முன் ஒரு மர்ம நபரால் உடைக்கப்பட்டது. பொதுமக்கள் அந்த நபரை பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். இந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பினர் அங்கு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர், உடைக்கப்பட்ட சிலையை சீரமைத்து மீண்டும் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனையடுத்து நேற்று அந்த இடத்தில் வேல் சிலை மீண்டும் நிறுவப்பட்டது. உடனடியாக வேல் தயாரித்து அளித்த ஸ்தபதிகள், விரைந்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினருக்கு ஹிந்து அமைப்புகள் நன்றி தெரிவித்தன.