முருகனை மறந்த திருச்செந்தூர் கல்லூரி

திருச்செந்தூர் சுப்பிரமணிசாமி கோயில் நிர்வாகத்தால் நிர்வகிக்கப்படும் கல்லூரியில் 3 மாத சைவவியல், வைணவவியல் சான்றிதழ் படிப்புகள் தொடங்கப்படும். என விளம்பரம் செய்யப்பட்டது. ஆனால், ஹிந்து சமய அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் அந்த கல்லூரியின் விளம்பரத்திலும் பெயர் பலகையிலும் முதல்வர் ஸ்டாலின், கருணாநிதி மற்றும் சேகர் பாபு உள்ளிட்டோர் படங்களே இடம்பெற்றுள்ளன. ஆனால் அக்கல்லூரிக்கே அடிப்படையான, திருச்செந்தூர் கோயிலின் படமோ அல்லது முருகன் படமோ இடம்பெறவில்லை. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜெயகுமார் தலைமையில் கல்லூரி முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தினர். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது என காவல்துறை உறுதியளித்ததன் பெயரில் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது.