கோயில் சிலைகள் உடைத்தவர் கைது

திண்டுக்கல் மாவட்டம்வடமதுரை அடுத்த, கத்தாளை குரும்பபட்டி ஊர் மந்தையில் விநாயகர் கோயில் உள்ளது. இங்கிருந்த விநாயகர், 4 நாகர் சிலைகள், மூஞ்சூறு வாகனம் உள்ளிட்ட ஆறு சிலைகளை அதே கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உடைத்துள்ளார். அதே நாளில் வீரபத்திர சுவாமி, ராவணேஸ்வரர் கோவிலுக்கான மின் இணைப்பு பெட்டியையும், தெருவில் உள்ள சில குழாய்களையும் சேதப்படுத்தினார். இது குறித்து வடமதுரை காவல் நிலையத்தில் ஊர் பொதுமக்கள், இந்து முன்னணி சார்பில் புகார்கள் தரப்பட்டன. அவரை கைது செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பாலகிருஷ்ணன் கேரளாவில் நிதி நிறுவனம் நடத்திவருகிறார். அங்கு அவர் வேற்று மதப் பெண்ணை காதலிக்கிறார். அதற்காக மதம் மாறி பெயர் மாற்றமும் செய்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னரும், இதேபோல தெருக்குழாய்களை சேதம் செய்து ஊர் பஞ்சாயத்தில் அபராதம் செலுத்தி உள்ளார் என்பது தெரியவந்தது.