எல்லை தாண்டி கல்யாணம் செய்தவர் கைது

மேற்கு வங்கம், நாடியா மாவட்டம் பல்லவ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்காந்தோ சந்திர ராய். இவருக்கு முகநூல் வாயிலாக நமது அண்டை நாடான வங்கதேசத்தின் நெரெயில் பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக கடந்த மார்ச்சில் ஜெய்காந்தோ சட்டவிரோதமாக எல்லை தாண்டி வங்கதேசம் சென்றார். அங்கு திருமணம் செய்து கொண்ட அவர்கள் இருவரும் மதுப்பூர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தனர். அப்போது, ரோந்து பணியில் இருந்த எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை கைது செய்து காவல் நிலையத்தில் மேல் விசாரணைக்கு ஒப்படைத்தனர்.