பிரிவினையை தூண்டும் வி.சி.க

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகத்தில், சென்னை அம்பேத்கர் சட்ட கல்லூரி மாணவர் ஜெ.பாரத் எழுதிய ‘திருமாவின் சிந்தனை கோட்பாடுகள்’ எனும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய திருமாவளவன், “தமிழ்நாடு எனும் ‘தனி நாடு’ அமைப்பதே தமிழ் தேசியத்தின் இறுதி இலக்காக இருக்க வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மொழி வழி தேசியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். அதன் ஒன்றியமாகதான் மத்திய அரசு இருக்க வேண்டும். மாநிலங்களின் ஒன்றியம் என்பதை விட தேசிய இனங்களின் ஒன்றியம் என இருக்க வேண்டும்” என்று தேசப்பிரிவினையை தூண்டும் விதமாக பேசியுள்ளார். இதற்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பிரிவினையை தூண்டும் திருமாவளவன் மீது தமிழக அரசும் மத்திய அரசும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.