லிங்க்கில் வரும் வில்லங்கம்

உங்கள் வங்கி கணக்கு எண் முடக்கப்பட்டது. வங்கி கணக்குடன் ஆதார் எண், பான் கார்டு இணைக்க வேண்டும்; நெட் பேங்கிங்’கை புதுப்பிக்க வேண்டும் என கூறி, சமீப காலமாக சில மர்ம நபர்கள் வங்கியில் இருந்து அனுப்புவது போல, ஒரு இணைய லிங்க்கை அனுப்பி வைக்கின்றனர். அந்த இணையவழி இணைப்பைக் கொண்டு தகவல்களை பதிவேற்ற கோரப்படுகிறது. அந்த லிங்க்கை நாம் கிளிக் செய்த 10 நிமிடங்களுக்குள், நமது வங்கி கணக்கில், ஏ.டி.எம்மில் இருந்து பணம் எடுத்தது போலவும், ‘ஆன்லைன்’ வாயிலாக பொருட்கள் வாங்கியது போலவும் பணம் சுருட்டப்படுகிறது. யாராவது புதிய நபர்கள் தொடர்பு கொண்டு, வங்கி எண், ஏ.டி.எம் கார்டு ரகசிய குறியீட்டு எண், ஓ.டி.பி எண்களை கேட்பது, ஏதேனும் சில எண்களை அனுப்பி, அதை, ‘பார்வேர்டு’ செய்ய சொல்லி கூறுவது போன்ற அழைப்புகளை துண்டித்து விடவும். இல்லையெனில் பணத்தை இழக்க நேரிடும் என, காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.