மத்திய அரசுக்கு நன்றி

போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் சிக்கிய மாணவர்களை மீட்கும் மத்திய அரசின் ‘ஆப்பரேஷன் கங்கா’ நடவடிக்கையின் காரணமாக பாரதம் திரும்பியவர்களில் ஒருவர் ஹிமாச்சல பிரதேசத்தை சேர்ந்த அங்கிதா. அவரது தந்தை ஜே.பி சிங், ஜலேடி ஆயுர்வேத மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார். மத்திய அரசு, தனது மகளை பத்திரமாக அழைத்து வந்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஜே.பி சிங், பி.எம் கேர்ஸ் நிவாரண நிதிக்கு ரூ. 21 ஆயிரமும் ஹிமாச்சல பிரதேச முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ரூ. 11 ஆயிரமும் வழங்கி தனது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தினார்.