மோடிக்கு நன்றி

பாரதத்தில் உள்ள குஜராத் மாநிலம் ஜாம் நகரில் உலக சுகாதார மையத்தின் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையம் அமைக்கப்படுகிறது. இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் பிரதமர் மோடி, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதனோம், மொரீசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜகநாத் ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டினர். இந்த மையத்தை அமைக்க பாரதம் ரூ. 2,000 கோடி (250 மில்லியன் டாலர்) நிதி வழங்கி இந்த மையத்தை அமைப்பதில் பெரும்பங்கு வகிக்கிறது. ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தோனேஷியாவின் பாலிக்கு சென்றுள்ள உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதனோம், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் தனது டுவிட்டர் பதிவில், “பிரதமர் மோடி அவர்களே, உலக பாரம்பரிய மருத்துவ மையத்தை கட்டியெழுப்புவதில் உலக சுகாதார நிறுவனத்துடனான உங்களுடைய ஒத்துழைப்புக்கு நன்றி. நாம் ஒன்றுபட்டு அனைவருக்கும் ஆரோக்கியம் வழங்குவோம்” என குறிப்பிட்டுள்ளார்.