தலைமறைவான பயங்கரவாதி கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பட்டியலின காங்கிரஸ் எம்.எல்.ஏ அகண்ட சீனிவாச மூர்த்தியின் மருமகன் நவீன், நபியை கேலி செய்தார் என கூறி, கடந்த வருடம் ஆகஸ்ட் மாத்த்தில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ) அதன் அரசியல் முகமான எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இணைந்து அகண்ட சீனிவாச மூர்த்தியின் வீடு, காவல் நிலையம், பொதுமக்களின் வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், காவல் நிலையம் உள்ளிட்டவற்றை எரித்தனர். பல ஹிந்துக்களை தாக்கினர். ஒரு சில மணி நேரத்தில் நூறு கோடி மதிப்பிலான பொது சொத்துகள் சேதம், உயிரிழப்புகள் ஏற்பட்டன. இதில் பல்வேறு பிரிவுகளின் கீழ் 109 முக்கிய குற்றவாளிகள் மீது என்.ஐ.ஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் இக்கலவர வழக்கில் தலைமறைவான குற்றவாளி தப்ரேஸ் என்பவனை மாநில காவல்துறையினருடன் இணைந்து என்.ஐ.ஏ கைது செய்துள்ளது.