கோயில் நிலத்தை எடுக்கக்கூடாது

சென்னை மண்டலத்தில் பொதுப் பணித்துறையால் கட்டப்பட்டு வரும் பல்வேறு கட்டடங்கள், நினைவுச் சின்னங்கள், மருத்துவமனை கட்டடங்கள், மணி மண்டபங்கள் போன்ற பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, பொதுப்பணித்துறை கட்டடங்களில், தரத்தை உறுதி செய்ய வேண்டும்.  தரத்தை பராமரிக்க வேண்டும். நில எடுப்பிற்கு நிலத்திட்ட அட்டவணை தயாரிக்கும்போது, தகுதியான இடத்தை தேர்வு செய்ய வேண்டும். கோயில் நிலங்களைத் தேர்வு செய்யக்கூடாது. சரியான இடம் தேர்வு செய்யப்படாததால், பல இடங்களில் கட்டுமான பணி தாமதம் ஏற்படுகிறது’ என கூறியுள்ளார்.