தமிழகம் 3ம் இடம்

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக தேசிய அளவில் தமிழகம் 3ம் இடம்பிடித்துள்ளது. இதற்கான விருதை பிரதமர் மோடி, தமிழக அமைச்சர் தா.மோ.அன்பரசனிடம் வழங்கினார். மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையால், “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் – 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள்” என்ற அடிப்படையில், மாநிலம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதுகளும், சிறப்புப் பிரிவு விருதுகளும், பயனாளிகளுக்கான விருதுகள் என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3வது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3வது இடமும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5வது இடமும் கிடைத்துள்ளன.