ஹிந்துக்களுக்கு தலிபான்கள் அழைப்பு

தலிபான்கள் கடந்த சில நாட்களாக ஹிந்து மற்றும் சீக்கிய அமைப்புகளிடம் பாதுகாப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக அவர்கள் வெளியிட்ட அறிவிப்பில், “பாதுகாப்பு பிரச்சினை காரணமாக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறிய ஹிந்துக்களும், சீக்கியர்களும் நாடு திரும்பலாம். பாதுகாப்பு பிரச்சினைகள் சீராக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பயங்கரவாத தாக்குதலில் சேதமடைந்த காபூலில் உள்ள குருத்வாரா கர்தே பர்வானை புதுப்பிக்க தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.