ஸ்டிக்கர் ஒட்டும் மமதா

மத்திய அரசின் திட்டங்களுக்கு தங்களது பெயரை ஒட்டிக்கொண்டு ஏதோ தாங்களே கண்டுபிடித்து செயல்படுத்தியதாக காட்டிக்கொள்வதில் புகழ் பெற்றது நமது தமிழக அரசு. இதற்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. இந்நிலையில், இதே வழியை பின்பற்றி தங்கள் மாநிலத்திலும் மத்திய அரசின் திட்டங்களுக்கு மாற்று பெயர் வைத்து வருகிறார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. மேற்கு வங்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், பா.ஜ.க தலைமையிலான அரசு, ‘பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் கீழ் ஏழை எளிய மக்களுக்காக லட்சக் கணக்கான நிரந்தர வீடுகளைக் கட்டி வருகிறது. ஆனால், மேற்குவங்க அரசு, மத்திய அரசின் அனைத்து திட்டங்களின் பெயர்களையும் மாற்றியமைத்து வருகிறது என கண்டித்து பேசினார்.