எஸ்.டி.பி.ஐ. நிர்வாகி கைது

கேரள மாநிலம் பாலக்காடு அருகேயுள்ள கொழிஞ்சாம்பாறையைச் சேர்ந்தவர் சஞ்சித். ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் தேனேரி பகுதியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர், கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று தனது மனைவியுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பி.எப்.ஐ என்ற பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா என்கிற பயங்கரவாத ஆதரவு அமைப்பின் அரசியல் பிரிவான எஸ்.டி.பி.ஐ கட்சியை சேர்ந்தவர்கள், சஞ்சித்தை பின்தொடர்ந்து வந்தனர். மாம்பரம் என்ற இடத்தில் அவரது மனைவியின் கண்முன்பே சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இவ்வழக்கில், எஸ்.டி.பி.ஐ கட்சி மற்றும் பி.எப்.ஐ அமைப்பைச் சேர்ந்த 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், முக்கியக் குற்றவாளியை காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.