பாலியல் பாதிரியார் கைது

ஆவடியை அடுத்த ஆரிக்கம்பேடு பகுதியை சேர்ந்தவர் 42 வயதான ஏஞ்சலின் என்பவர் குடும்ப பிரச்சினை காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். ஜெபம் செய்தால் சரியாகிவிடும் என்ற உறவினர் ஒருவரின் பேச்சை கேட்டு ஆவடியை அடுத்த மோரை நியூ காலனியில் உள்ள ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குச் சென்றார். அங்கிருந்த ஸ்காட் டேவிட் என்ற 53 வயதான பாதிரியார் ஏஞ்சலினுக்கு ஜெபம் செய்யும் சாக்கில் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஏஞ்சலின் அளித்த புகாரின் பேரில் ஆவடி டேங்க் பேக்டரி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் ஸ்காட் டேவிட்டை கைது செய்தனர். பின்னர் அம்பத்தூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர்.