ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம்

டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் 57 கிலோ மல்யுத்த இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் ரவிக்குமார் தாஹியா ரஷ்யாவின் உகுயேவை எதிர்த்து விளையாடினார். இதில் 7-4 என்ற கணக்கில் ரஷ்ய வீரர் வென்றார். இதனால் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப்பதக்கம் வென்றார். இதையடுத்து, சுஷில் குமாருக்கு பிறகு மல்யுத்த விளையாடில் இரண்டாவது வெள்ளிப் பதக்கம் வென்ற பாரத வீரர் என்ற பெருமையையும் ரவிக்குமார் பெற்றுள்ளார்.