பலாத்கார பாதிரி கைது

உத்தரபிரதேசத்தின் பாக்பத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சர்ச்சின் பாதிரி 67 வயதான ஆல்பர்ட், குழந்தைகள் பாலியல் குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் (போக்சோ) கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார்.  அந்த சர்ச் அருகே 11 வயதான ஒரு பட்டியலின சிறுமி சைக்கிளில் சுற்றிக் கொண்டிருந்தார். அப்போது ஆல்பர்ட் அந்த சிறுமிக்கு பணம் தருவதாக ஆசைக்காட்டி தனது அறைக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும், எதிர்ப்பு தெரிவித்தால், வெளியில் சொன்னால் ​​கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிறுமியை மிரட்டியுள்ளார். வீட்டிற்கு வந்த சிறுமியின் உடலில் உள்ள ரத்தக்கறையைப் பார்த்து சந்தேகம் அடைந்த சிறுமியின் தாய் தனது மகளிடம் விசாரித்தபோது, ​​சிறுமி கதறி அழுது நடந்த சம்பவத்தை கூறினார். இதனையடுத்து சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து பாதிரியை கைது செய்தனர்.