பிரதமர் சென்னை வருகை

மாமல்லபுரத்தில் நடைபெறும், 44வது சர்வதேச ‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டியை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் மோடி இன்று சென்னை வருகிறார். சென்னை, ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறும் துவக்க விழாவில் இந்த போட்டியை பிரதமர் துவக்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலின், மத்திய, மாநில அமைச்சர்கள் மற்றும் சர்வதேச விளையாட்டு வீரர்கள் பலர் பங்கேற்கின்றனர்.