சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கு பிரதமர் வாழ்த்து

மத்திய ரிசர்வ் காவல் படையின் (சி.ஆர்.பி.எப்) அமைப்பு தினத்தை முன்னிட்டு அதன் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், “சி.ஆர்.பி.எப் வீரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் அமைப்பு தின நல்வாழ்த்துகள். தனது அசைக்க முடியாத துணிச்சல், பிரத்யேகமான சேவையால் சி.ஆர்.பி.எப்,  தனித்துவம் வாய்ந்த படையாக விளங்குகிறது. பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதாக இருந்தாலும், மனிதாபிமான சேவைகளில் ஈடுபடுவதாக இருந்தாலும் சி.ஆர்.பி.எப்பின் பணி, பாராட்டுக்குரியது” என தெரிவித்துள்ளார்.