கோவை ரயில் நிலையத்துக்கு பிளாட்டினம்

சேலம் கோட்டத்தில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் நிலையமாக கோவை ரயில் நிலையம் விளங்குகிறது. ‘ஏ1’ அந்தஸ்து பெற்ற இந்த ரயில் நிலையம் ஐ.எஸ்.ஓ., தர மேலாண்மை சான்றிதழ், சுற்றுச்சூழல், பாதுகாப்பு சான்றிதழ்களை ஏற்கனவே பெற்றுள்ளது. ‘கிரீன் ரேசியோ’ எனப்படும் பசுமை தரமாக்கலில், கடந்த, 2018 முதல் கோவை ரயில் நிலைய வளாகத்தில் சூரியசக்தி மின்சாரம், மழை நீர் சேகரிப்பு, ‘மியாவாக்கி’ முறையில் மரம் நடுதல், 100 சதவீத எல்.இ.டி., விளக்குகள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், மினி பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பார்வையற்றோருக்கு பிரெய்லி போர்டுகள், நோயாளிகள், முதியோர் சென்று வர சாய்வு தளம், லிப்ட், தானியங்கி படிக்கட்டுகள், தாய்ப்பால் ஊட்டுவதற்கென தனி அறை என ஏராளமான சிறப்பு வசதிகள் கோவை இரயில் நிலையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்தியன் கிரீன் பில்டிங் கவுன்சில் ஆய்வில் கட்டமைப்பு, ஆற்றல், நீர் மேலாண்மை என 6 பிரிவுகளில் 100க்கு, 83 புள்ளிகள் பெற்று தேசிய அளவில், ‘பிளாட்டினம்’ சான்றிதழை கோவை ரயில் நிலையம் பெற்றுள்ளது.