நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள்

டெல்லியில் நாடாளுமன்றம் தாக்கப்பட்டதின் 20ம் ஆண்டு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர், இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக உடனையாக செயல்பட்டு நாடாளுமன்றத்தையும் அதன் பிரதிநிதிகளையும் பாதுகாத்து உயிர் தியாகம் செய்த துணிச்சலான பாதுகாப்பு வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.