பாரம்பரிய சீருடையுடன் அணிவகுப்பு

டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் ராணுவத்தை சேர்ந்த 6 குழுக்கள், கடந்த காலத்தில் சீருடை, துப்பாக்கிகள் போன்றவை எப்படி பரிணாம வளர்ச்சி அடைந்தன என்பதை காட்சிப்படுத்த உள்ளன. ரஜ்புத் ரெஜிமெண்ட்டை சேர்ந்த முதல் குழு, 1950களில் இருந்த ராணுவ சீருடையை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. அசாம் ரெஜிமெண்டை சேர்ந்த குழு, 1960களில் இருந்த சீருடை அணிந்து, .303 துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. ஜம்மு காஷ்மீர் காலாட்படையை சேர்ந்த படைவீரர்கள் 1970களின் சீருடை அணிந்து, 7.66 எம்.எம். ரக துப்பாக்கியுடன் பங்கேற்கின்றனர். 4 மற்றும் 5வது குழுக்கள், தற்போதைய ராணுவ சீருடை அணிந்து பங்கேற்கின்றன. பாராசூட் ரெஜிமெண்டை சேர்ந்த 6வது குழு, இம்மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ராணுவ சீருடை அணிந்து டாவர் ரக துப்பாக்கியுடன் பங்கேற்கிறது. கொரோனா காலம் என்பதால், ஒவ்வொரு குழுவிலும் 144 பேருக்கு பதிலாக 96 பேர் மட்டும் இடம் பெறுவார்கள்.