பா.ஜ.கவில் இணைந்த ஊராட்சி தலைவர்

தி.மு.கவின் நீண்டகால உறுப்பினரும், கள்ளக்குறிச்சி மாவட்டம் தாகம் தீர்த்தாபுரம் ஊராட்சி தலைவருமான ஜெயமணி மணிவேல், தி.மு.க.வில் இருந்து விலகி அம்மாவட்ட பா.ஜ.க தலைவர் பாலசுந்தரம் முன்னிலையில் தம்மை பா.ஜ.கவில் இணைத்து கொண்டார். பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றனர்.