என்.ஐ.ஏ சோதனை

தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள யூசுப் அஸ்லாம் என்பவரது வீட்டில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.,) அதிகாரிகள் சோதனை நடத்தினர். தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புடன் அவருக்கு தொடர்பு உள்ளதாக வந்த தகவலை அடுத்து அவரது வீடு, கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல மதுரை, தெப்பக்குளம், தமிழன் தெருவில் வசித்து வரும் அப்துல்லா என்பவரது வீட்டிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவர் பாரத இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டதாக வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாகவே சோதனை நடைபெற்றது.