காஷ்மீரில் என்.ஐ.ஏ சோதனை

பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக காஷ்மீரின் பல இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின் (என்.ஐ.ஏ) அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி அளித்தது தொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் பல்வேறு நபர்களுக்கு சம்பந்தம் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீநகர், அவந்திபோரா, புல்வாமா, குல்காம் மற்றும் அனந்த்நாக் உள்ளிட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள பல இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது ஸ்ரீநகர் சோஸெய்த் பகுதியைச் சேர்ந்த இசாக் அகமது பட் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இவ்வழக்கு தொடர்பால தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான்காஷ்மீரின் பல இடங்களில் சோதனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் ஒரு சோதனை நடத்தப்பட்டுள்ளது.