திருமலையில் புதிய விதிமுறைகள்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு புதிய வழிக்காட்டு நெறிமுறைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி, தரிசன டிக்கெட் பெற்று, நடைபாதை மார்க்கத்தில் திருமலைக்கு செல்ல விரும்புபவர்கள் 24 மணி நேரத்திற்கு முன்பே நடைபாதையில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அடுத்த நாளுக்கான தரிசன டிக்கெட் வைத்திருக்கும் பக்தர்கள், மதியம் 1:00 மணிக்கு மேல் மட்டுமே வாகனங்கள் வாயிலாக திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என  அறிவிக்கப்பட்டுள்ளது.