நாராயண் ரானே கைது

சுதந்திர தின உரையின் போது, நாட்டின் எத்தனையாவது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறோம் என தெரியாத முதல்வர் உத்தவ் தாக்கரேவை, அங்கிருந்திருந்தால் நான் அறைந்திருப்பேன் எனக் கூறினார் மத்திய அமைச்சர் நாராயண் ரானே. இதனைத் தொடர்ந்து மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல பகுதிகளில் நாராயண் ரானேவை கண்டித்து சிவசேனா தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சில இடங்களில் பா.ஜ.கவினருக்கும், சிவசேனாவினருக்கும் மோதல் ஏற்பட்டது. நாராயண் ரானேவுக்கு எதிராக சிவசேனா நிர்வாகிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர்.  இதனால் அவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தன் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்யுமாறு மத்திய அமைச்சர் நாராயண் ரானே, மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், நாராயண் ரானே மஹாராஷ்ட்ரா காவல்துறையால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.