முஸ்லிம் வன்முறை கும்பல்

மகாராஷ்டிர மாநிலம் யவத்மாலில் 22 வயதேயான ஹிந்து இளைஞர் ஷியாம் ரத்தோட் என்பவரின் இருசக்கர வாகனம், ஒரு முஸ்லிம் நபரின் வாகனம் மீது மோதியதால் சிறு வாய் தகராறு ஏற்பட்டது. அதன் பிறகு அவர் மீண்டும் தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, காளி தௌலத்கான் பகுதியில் அவரை பின்தொடர்ந்து வந்த முஸ்லிம் வன்முறை கும்பல், கத்தி மற்றும் வாள்களால் அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றது. சம்பவ இடத்திலேயே ஷியாம் உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. குற்றவாளிகள் கைது செய்யப்படும்வரை ஷியாமின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வன்முறையில் ஈடுபட்டதாகக்கூறி, ஷேக் சாதிக், சையத் கலிம் சிராஜுதீன் முகிமோடின் ரபிகுதீன் ஆகியோரை காவல்துறை கைதுசெய்தது. அவர்களிடம் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.