முஸ்லிம் வீட்டார் தொல்லை

டெல்லியில் உள்ள காளிந்தி குஞ்ச் பகுதியில் வசிக்கும் ஒரு ஹிந்து குடும்பத்தின் வீட்டில் பூஜைகள் செய்தபோது, அங்கு நுழைந்த அண்டை வீட்டை சேர்ந்த டேனிஷ் என்ற முஸ்லீம் இளைஞனும் அவனது நண்பர்களும் அவர்கள் தொடர்ந்து பூஜைகள் செய்தால் மோசமான விளைவுகள் ஏற்படும், குடும்பத்தையே கொன்று புதைத்து விடுவோம் என்று மிரட்டியுள்ளனர். இதுகுறித்து அக்குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவல்துறையினர் புகாரை பதிவு செய்யாமல் சமரசம் பேசி அனுப்பிவிட்டனர். இதனை அறிந்து அங்கு சென்ற பஜ்ரங்தள் அமைப்பினர் அவர்களுக்கு ஆறுதல் கூறினர். அக்கம்பக்கத்தில் முஸ்லிம்களின் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. ஆம்ஆத்மி கட்சியினர் அவர்களுக்கு ஆதரவாக உள்ளனர். பல ஹிந்து குடும்பங்கள் இதுபோன்ற தொடர் சம்பவங்கள் காரணமாக இடம் பெயர்ந்து விட்டனர் எனவும் தெரிவித்துள்ளனர்.