இறையாண்மைக்கு சவால் விடும் திருமா

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பிரிகேடியர் சுப தமிழ்ச்செல்வனின் நினைவுநாளில் அவருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம். இன்று காலை 10.30 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது” என தெரிவித்துள்ளார். இதற்கு சமூக ஊடகங்களில் மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ‘விடுதலை புலிகள் இயக்கம் என்பது, பாரதத்தில் தடை செய்யப்பட்டுள்ள ஒரு பயங்கரவாத இயக்கம். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியை படுகொலை செய்ய சதி செய்ததோடு, படுகொலைக்கு திட்டமிட்டு கொடுத்ததும் அந்த பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் பிராபகரன் என்று நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், பாரதத்தின் நாடாளுளுமன்ற உறுப்பினரான திருமாவளவன், பொதுவெளியில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் அந்த பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துவதும் படுகொலையை அரங்கேற்றிய நபரின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளதும் கண்டிக்கத்தக்கது’ என கண்டித்து வருகின்றனர். மேலும், இப்படி நாட்டின் இறையாண்மைக்கு சவால் விடும் திருமாவளவனை மக்களைவை உறுப்பினர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும், தமிழக காவல்துறை திருமாவளவனை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும், தமிழக அரசும், நீதிமன்றமும் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள், வி.சி.க’வை தனது கூட்டணியில் இருந்து உடனடியாக விலக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.