எம்.பி’யாகும் பிப்லப் தேப்

திரிபுராவின் முன்னாள் முதல்வர் பிப்லப் தேப், திரிபுரா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை எம்.பி.க்கான தேர்தலில் போட்டியிடுவார் என பா.ஜ.க. சார்பில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்த தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணிக் சஹா பதவி விலகியதுதால் காலியான தொகுதியில் பிப்லப் தேப் போட்டியிடுகிறார். அடுத்த ஆண்டு திரிபுராவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள சூழலில் மாணிக் சஹா, திரிபுராவின் முதல்வராகியுள்ளார். மாநிலங்களவை எம்.பி. தேர்தல் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. சட்டசபையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை உள்ள சூழலில், பிப்லப் தேப் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.