ரஸ்கின் பாண்ட் பாராட்டிய மோடி

பிரிட்டனை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட். இவரது தந்தை பாரத சுதந்திரத்திற்கு முன், ஆங்கிலேய விமானப்படை அதிகாரியாக இருந்தார். இதனால், ரஸ்கின் பாண்ட் பாரதத்தில் பிறந்து, வளர்ந்து வாழ்ந்து வருபவர். இவர் சமீபத்தில் எழுதிய ‘எ லிட்டில் புக் ஆப் இந்தியா: செலிபிரேட்டிங் 75 இயர்ஸ் ஆப் இண்டிபெண்டன்ஸ்’ என்ற புத்தகத்தில், நேரு முதல் நரேந்திர மோடி வரை அவர்களின் தனித்தன்மை குறித்து கூறியுள்ளார். அதில், பிரதமர் மோடி பற்றி குறிப்பிடுகையில், ‘மோடிக்கு இயற்கையிலேயே அரசியல் புத்திசாலித்தனம் உள்ளது. அவரது பணிவான துவக்கமும், துறவியை போன்ற மன உறுதியுமே அவரை இரண்டு முறை பிரதமராக்கி உள்ளது’ என புகழ்ந்துள்ளார்.