ஹிந்து பள்ளிகளுக்கு குறி

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலு‌க்கு சொந்தமான காந்திமதி மேல்நிலை பள்ளி, கொரோனா தடுப்பு மையமாக மாற்றுவதற்காக, பள்ளியில் 10, 11, 12வது படிக்கும் மாணவிகளை அருகிலுள்ள ரஹ்மானியா பள்ளிக்கு மாற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதற்கு இந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நெல்லையப்பர் கோயில் நிர்வாகத்தில் உள்ள பள்ளியில் பிரார்த்தனைகள் ஹிது முறைப்படி நடைபெறும். அந்த மாணவிகளையும் ஆசிரியர்களையும் முஸ்லிம் பள்ளிக்கு அனுப்புவது எந்த வகையில் நியாயம்? மேலும் காந்திமதி மேல்நிலைப்பள்ளி பெண்கள் பள்ளி, ரஹ்மானியா பள்ளி ஆண்கள் பள்ளி. இதனால் பிரச்சினைகள் உருவாகும். பாளையங்கோட்டையில் எத்தனையோ கிறிஸ்தவ டயோசிசன் பள்ளிகள் இருக்கையில் மீண்டும் மீண்டும் ஏன் காந்திமதி பள்ளியை மட்டுமே குறிவைத்து கொரோனா மையமாக அரசு மாற்றுகிறது.

ஹிந்துத் திருக்கோயில் நிர்வாகத்தின் பள்ளிகள் என்ன எடுப்பார் கைப்பிள்ளையா? ஹிந்து பள்ளிப் பிள்ளைகளை முஸ்லிம் பள்ளியில் பாடம் கற்க வைத்து மத பிரச்சினையை தூண்டுகிறதா மாவட்ட நிர்வாகம்? என கேட்டுள்ள இந்து முன்னணி, மாவட்ட ஆட்சியர் இதில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுத்துள்ளது. இல்லையெனில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.