நூலகம் திறக்க உத்தரவு

கொரோனா   ஊரடங்குக்கு   பிறகு  திரையரங்குகள் கூட  100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அறிவை வளர்க்கும் நூலகங்களை முழுமையாக திறக்க தமிழக அரசு அனுமதிக்கவில்லை. மதுரை, சௌந்தர்யா என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் நான்கு வாரங்களுக்குள் நூலகங்களை திறந்து வழக்கம்போல் இயக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.