கொரோனா ஊசி போட லீவ்

உத்தரபிரதேச அரசு, கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணியை மேலும் விரைவாக்கும் வகையில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் ஒரு நாள் விடுப்பெடுத்துக்கொள்ள அனுமதியளித்துள்ளது. மேலும், தடுப்பூசி கண்காணிப்புக் குழுக்கள் கிராமம், நகர்ப்புறங்களில் முழுமையாக செயல்படுவதை உறுதி செய்யவும், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், குடியிருப்புப் பகுதிகள், பள்ளிகள் போன்ற இடங்களில் அதிக கவனம் செலுத்துமாறும் அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. ஊடகவியலாளர்களுக்கான பிரத்தியேக கோவிட் -19 பரிசோதனை முகாம்களையும் மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.