காணி சமுதாய பொங்கல் விழா

கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை அடுத்த 48 மலை கிராமங்களில் வசித்து வரும் காணி சமுதாய மக்களுக்கான பொங்கல் விழா ஆற்றூர் என்.வி.கே.எஸ் பள்ளியில் நடைபெற்றது. ஜனவரி 7, 8ம் தேதிகளில் நான்காவது ஆண்டாக நடைபெற்ற இவ்விழாவில், சுமார் 1,500 காணி சமுதாய மக்கள் குடும்பத்தோடு இவ்விழாவில் கலந்து கொண்டார்கள். விளக்கு பூஜை, சிறப்பு யாகம், பொங்கல், வயது வாரி குழு சந்திப்பு போன்ற பல நிகழ்ச்சிகள் இதில் நடைபெற்றன. வந்திருந்தவர்களுக்கு பொங்கல் விருந்து, பொங்கல் பானை, பொங்கல் வைப்பதற்கான பொருட்கள், புத்தாடைகள் வழங்கப்பட்டன. மலைப்பகுதியை சேர்ந்த ரேஷ்மா என்ற மாணவிக்கு ஐ.ஏ.எஸ் படிப்பதற்கான உதவித்தொகை விழாவில் வழங்கப்பட்டது. 4 ஆண்டு தொடர் முயற்சியால் இந்த மலைவாழ் மக்களில் மதம் மாறி சென்ற 40 சதவிகித மக்களில் 20 சதவிகித மக்கள் தாய் மதம் திரும்பியுள்ளனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காணி சமுதாய மக்கள் ‘மதம் மாட்டோம்’ என உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். சேவா பாரதி அமைப்பின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் கே. ராஜேஸ்வரன்ஜி, என்.வி.கே.எஸ் பள்ளியின் செயலாளர்எஸ். கிருஷ்ணகுமார், காளி மலை அறக்கட்டளை உறுப்பினர் ரவிக்குமார், ஹிந்து தர்ம வித்யாபீடம் வெள்ளிமலை ஸ்ரீமத் சுவாமி சைதன்யானந்தஜி மஹாராஜ், ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் தென்பாரதத் தலைவர் வன்னியராஜன் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.