விளக்கு ஏந்தி போராட்டம்

கிறிஸ்தவ பள்ளியின் மதமாற்ற அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும், சி.பி.ஐ விசாரணை கோரியும், அதில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து தண்டிக்கக் கோரியும், கட்டாய மதமாற்றத்தை தடுக்கக் கோரியும் இந்து அன்னையர் முன்னணி சார்பில், தமிழகமெங்கும் கைகளில் விளக்கு ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இந்து அன்னையர் முன்னணியை சேர்ந்த தாய்மார்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.