ஜார்கண்ட் அரசுக்கு ஜைனர்கள் எதிர்ப்பு

ஜைனர்களின் புனித யாத்திரை மையங்களில் ஒன்றான ஸ்ரீ சம்மேத் ஷிகர்ஜியை சுற்றுலா மையமாக மாற்றுவதற்கான ஜார்கண்ட் அரசின் முடிவு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ஜெய்ப்பூரில் உள்ள ஜெயின் துறவியான சுகேசாகர் மகராஜ், ஜார்கண்ட் அரசின் இந்த முயற்சிக்கு எதிராக சங்கனேரில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொண்டார். கடந்த 10 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த ஜெயின் முனி சுகேசாகர் மகராஜ் செவ்வாய்க்கிழமை முக்தி அடைந்தார். ஜெயின் துறவிகள் தங்கள் ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி பரிநிர்வாணத்தை அடைவதற்காக அல்லது தங்களுக்கும் தங்கள் சமூகத்திற்கும் இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகப் போராடும் ஒரு வழியாக சாகும்வரை உண்ணாவிரதத்தைக் கடைப்பிடிக்கின்றனர். ஸ்ரீ சம்மேத் ஷிகர்ஜியை சுற்றுலா மையமாக மேம்படுத்தும் ஜார்க்கண்ட் அரசின் நடவடிக்கைக்கு எதிராக நாடு தழுவிய அளவில் ஜெயின் சமூகத்தினர் நடத்திய போராட்டங்கள் இவரது மரணத்தால் சூடுபிடித்துள்ளது. இந்த வாரமும் போராட்டங்கள் தொடர்ந்தன. நாடு முழுவதும் பல நகரங்களில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் தெருக்களில் இறங்கி ஜார்கண்ட் அரசின் முடிவை திரும்பப் பெறக் கோரினர். 20 தீர்த்தங்கரர்களின் முக்தித் தலங்களைக் கொண்ட இந்த மலைக்கு உலகம் முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான ஜைனர்கள் வருகின்றனர். ஜைனர்களைத் தவிர, சந்தால் பழங்குடியின மக்களாலும் இந்த மலைகள் புனிதமாகக் கருதப்படுகின்றன. அவர்கள் அதை ‘மரங் புரு’ என்று கருதுகின்றனர் மற்றும் ஏப்ரல் நடுப்பகுதியில் இங்கு ஆண்டு விழாவை நடத்துகின்றனர்.