ஜே.பி நட்டா வருகை

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “அகில இந்திய அளவில் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். அந்த வகையில் முதன் முறையாக இன்று கோவை, நீலகிரியில் இருந்து பயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் இருந்து இந்த பயணத்தை தொடங்க வேண்டும் என்பதற்காகவே கோவை, நீலகிரியில் இருந்து அவர் தனது நாடாளுமன்ற பயணத்தை தொடங்கியுள்ளார். பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வருகை தமிழகத்தில் மிகப்பெரியை எழுச்சியை ஏற்படுத்தும்” என கூறினார்.