மேஸ்ட்ரோவை அவமதிப்பதா?

பிரபல இசையமைப்பாளரான இளையராஜா, பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு புத்தகம் ஒன்றில் தனது கருத்தை சொல்லியிருந்தார். பலர் அதனை ஆமோதித்தாலும் திராவிட கட்சிகள், அதனை சார்ந்துள்ள உதிரிக்கட்சிகள், சார்பு ஊடகங்கள், திரைத்துறையினர் என சிலர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தனது கருத்தை ஒருபோதும் திரும்பப் பெற மாட்டேன் என இளையராஜா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா, “தமிழகத்தை ஆளும் ஆளுங்கட்சிக்கு ஆதரவானவர்கள் இளையராஜாவை அவமதித்து வருகிறார்கள். ஆளும் தரப்புக்கும், அதன் கூட்டணி கட்சிகளுக்கும் சாதகமாக இளையராஜா பேசவில்லை என்பதற்காக நாட்டின் மிகச்சிறந்த இசைமேதையை இழிவு செய்து வருகின்றனர். அவரது கருத்து என்பது அவரது தனிப்பட்ட பார்வை. இசை மேஸ்ட்ரோவை அவமதிப்பது நியாயமாகாது. இளையராஜா குறித்த விமர்சனங்களில் ஜனநாயகம் இல்லை. தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க தொண்டர்கள் குறிவைத்துத் தாக்கப்படுகின்றனர். இதுமாதிரியான சம்பவங்களில் எதிர்கட்சிகள் சகிப்புத்தன்மையின்றி நடந்து கொள்கின்றன” என கருத்துத் தெரிவித்துள்ளார்.