ஒலிம்பிக்கில் பாரதக் கொடி

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் வரும் 23ம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி அன்று நடைபெறும் தொடக்க விழா அணிவகுப்பில், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் ஆடவர் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர் தேசியக் கொடியை ஏந்தியபடி பாரத வீரர்கள் குழுவினரை வழிநடத்திச் செல்வார்கள். ஆகஸ்ட் 8-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா தேசியக் கொடியை ஏந்திச் செல்வார் என இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது. இதில், சுமார் 126 வீரர், வீராங்கனைகளும் 75 அதிகாரிகளும் என பாரதத்தில் இருந்து சுமார் 201 பேர் பங்கேற்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.